ரேசனில் அரிசி, பருப்பு தட்டுப்பாடு... போராட்டம் நடத்திய கனிமொழி எம்.பி கைது
ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு தட்டுப்பாடு நிலவுவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கனிமொழி கைது செய்யப்பட்டார்.
சென்னை: மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்க தட்டுப்பாடு நிலவுவதாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் மதுபாட்டில்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ரேசன் கடை முன்பு போராட்டம் நடத்திய கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிப்பதில்லை என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தி ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் கனிமொழி எம்பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கடையை முற்றுகையிட முயன்ற கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

கடும் தட்டுப்பாடு
போராட்டத்தின் போது பேசிய கனிமொழி, மாநிலம் முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

அரிசியில் தரமில்லை
விலையில்லா அரிசி கொடுத்தாலும் அது தரமானதாக இருப்பதில்லை என்று கூறிய கனிமொழி, மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதைப்பற்றி அமைச்சர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார்.

எம்எல்ஏக்கள் நிலை
அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. தங்களின் பதவியை பாதுகாத்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறிய கனிமொழி, மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.

தண்ணீர் தட்டுப்பாடு
மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், லாரி தண்ணீர் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே கிடைப்பதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார். பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காகவே இந்த போராட்டத்தை எதிர்கட்சியான திமுக நடத்துவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications