கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்கு வந்த கனிமொழி
Recommended Video
சென்னை: காலையில் வீட்டிற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி சிறிது நேரத்தில் தனது கணவர் அரவிந்தனுடன் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28ம் தேதி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அவரின் உடல்நிலை அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே எதுவும் கூற முடியும் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய திமுக எம்.பி. கனிமொழி சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தார். இரவு முழுக்க மருத்துவமனையில் இருந்து தந்தையை கவனித்துக் கொண்ட அவர் காலையில் வீட்டிற்கு கிளம்பினார்.
DMK leader Kanimozhi meets people gathered outside Chennai's Kauvery hospital where her father and former Tamil Nadu CM M Karunanidhi is undergoing treatment. The hospital stated a decline in his medical condition yesterday. pic.twitter.com/l87nQ0PwJf
— ANI (@ANI) August 7, 2018
வீட்டிற்கு சென்ற வேகத்தில் தனது கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதில் இருந்து திமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.
இருப்பினும் தலைவர் எழுந்து வருவார் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை.