கருத்துக்களை பதிவு செய்யக் கூட தமிழனுக்கு உரிமையில்லையா?.. கனிமொழி கடும் கண்டனம்
புதுச்சேரி: காவிரிப் பிரச்சினையில் கருத்துக்களைப் பதிவு செய்யக் கூட தமிழனுக்கு உரிமையில்லை என்ற நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழ் இளைஞரைத் தாக்கிய செயல் மனிதாபிமானமற்ற இழுக்கான செயலாகும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மகன் திருமண வரவேற்பு விழா புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, வைகோ, கனிமொழி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், கருத்துக்களை பதிவு செய்யக்கூட தமிழனுக்கு உரிமையில்லை என்ற நிலை கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. தமிழனை தாக்கியது மனிதாபிமானமற்ற இழுக்கான செயல். இச்செயலை செய்தவர்களை கர்நாடக அரசு கண்டிக்க வேண்டும், நதிநீர் பிரச்சனைகளை திசை திருப்பி மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications