மது விலக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.. கனிமொழி தலைமையில்.. 3ம் தேதி கோவையில்!
கோவை: தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி கோவையில் இந்த மாதம் 30 ஆம் தேதியன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தி.மு.க மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் வருகிற 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.

கோவை மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, வீரகோபால், தமிழ் மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டர் அணி, துணை செயலாளர் மீனா லோகு முன்னிலை வகிக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், கோவை மு.ராமநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, விடுதலை விரும்பி, இரா. மோகன் மற்றும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications