ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம்.. அஞ்சலி செலுத்திய கனிமொழி உருக்கம்
ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என கனிமொழி உருக்கமாக தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.

திமுக பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சென்ற சில நிமிடங்கள் கழித்து, அஞ்சலி செலுத்த கனிமொழி வந்திருந்தார். அவர், சசிகலாவிடம் துக்கம் விசாரித்தார் கனிமொழி.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கனிமொழி, "ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா ஒரு தைரியமான பெண்மணி. அவரை இழந்து வாடிக்கொண்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தார்" என்றார்.












Click it and Unblock the Notifications