ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அலட்சியம்-கேரளாவில் அடைக்கலமாவோம் என குமரி மக்கள் எச்சரிக்கை
மீனவர்களை கண்டுபிடிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தால் கேரளாவிடம் அடைக்கலம் கோரப்போவதாக குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

குழித்துறை: ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தால் கேரளாவிடம் அடைக்கலம் கோரப்போவதாக குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 30ம் தேதி கன்னியாகுமரியை புரட்டிப் போட்ட ஓகி புயல் ஆயிரக்கணக்கான மீனவர்களின் நிலை என்ன என்பதை தெரியாமல் போக வைத்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்றவர்கள் சிலர் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா கடற்பகுதியில் கரை சேர்ந்தாலும், சுமார் ஆயிரம் மீனவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை என்பது கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராம மக்களின் கவலை.
கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமர் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று குழித்துறை ரயில் நிலையத்தில் 8 கிராம மீனவர்கள் மறியல் போராட்டம். பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேடுதல் எல்லையை விரிவுபடுத்த வேண்டும்
காணாமல் போன மீனவர்களை சுமார் 60 நாட்டிகல் மைல் வரை மட்டுமே தேடி விட்டு தமிழக அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவதாகவும். தேடுதல் பரப்பை 200 நாட்டிகல் மைல் வரை நீட்டிக்க வேண்டும் என்பது மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

8 நாட்களாக காணவில்லை
மீனவர்களை தேடுவதில் கேரள அரசு முனைப்பாக இருப்பதாகவும், தமிழகம் அதில் போதிய கவனம் செலுத்த வில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடலுக்கு சென்ற தங்களின் குடும்பத்தாரின் நிலை என்ன என்று தெரியாமல் 8 நாட்களாக பதைபதைப்புடன் இருப்பதாக மீனவர்களின் குடும்பப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்தே சென்று அடைக்கலம் கோருவோம்
மீனவர்களை மீட்பதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தால் 38 கி.மீ. தொலைவு நடந்து சென்று கேரளாவிடம் அடைக்கலம் கோருவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீனவ கிராமங்களில் சுமார் ஆயிரம் பேருடன் தொடங்கிய பேரணி மக்கள் அணிஅணியாக திரண்டு வந்து பங்கேற்றதால் மாபெரும் தன்னெழுச்சி போராட்டமாக குமரி மீனவர்களின் போராட்டம் மாறியுள்ளது.
கொந்தளிக்கும் மீனவ பெண்கள்
பெரும்பாலான மீனவ குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் கடலுக்கு சென்றுவிட்ட நிலையில் பெண்கள் தாங்கள் மட்டும் எப்படி வாழ முடியும். அரசு இதற்கு ஒரு முடிவு செய்து மீனவர்களை தேடுவதை தீவிரப்படுத்தினால் ஒழிய அனைவரும் கடலில் விழுந்து உயிரை விடுவதை விட வேறு வழியில்லை என்று கொந்தளிக்கின்றனர் மீனவப் பெண்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications