போலீஸாரை கிறுகிறுக்க வைக்கும் 'தில்லாலங்கடி' மோகனாம்பாள்...!
வேலூர்: போலீஸாருக்கு நன்றாகவே தண்ணீர் காட்டி வருகிறார் கரகாட்டக் கலைஞரான மோகனாம்பாள். இவரது வீட்டில்தான் சமீபத்தில் கோடி கோடியாக பணம், நகைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் தலைமறைவாகி விட்ட மோகனாம்பாளைப் பிடிக்க வேலூர் போலீஸார் கடுமையாக போராடி வருகின்றனர்.
வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த மோகனாம்பாளின் காட்பாடி வீட்டில் ரூ. 4 கோடி பணம் மற்றும் 73 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா, அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சரவணனின் மனைவி தேவிபாலா, மோகனாம்பாளின் அக்கா நிர்மலாவின் மூத்த மகன் பழனி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மோகனாம்பாளுக்கு உதவியதாக அணைக்கட்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பாபுவையும் போலீசார் கைது செய்தனர்.
அதேசமயம், மோகனாம்பாள் மற்றும் 2 பேர் இதுவரை சிக்கவில்லை. இவர்களுக்கு செம்மரக் கடத்தலில் தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. இவர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாக போராடி வருகின்றனர்.
3 பேரும் இருப்பிடத்தை மாற்றி மாற்றி போலீஸாருக்கு போக்கு காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் முன்ஜாமீனுக்கும் முயன்று வருகிறார்களாம்.
ஒவ்வொரு நாளும் இவர்கள் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட மறுநாள் மட்டும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் செல்போனில் பேசியுள்ளனர்.
அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பேசியது தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் எந்த செல்போன் நம்பரில் உள்ளனர் என்பது மர்மமாகி விட்டது.
இருந்தாலும் அவர்கள் பதுங்கியிருந்து கோர்ட்டில் முன்ஜாமீன் பெற முயற்சித்து வருவது போலீசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் எந்த கோர்ட்டில் சரணடைந்து விடாமலும், முன்ஜாமீன் பெறாமலும் தடுக்க வேண்டிய முயற்சிகளில் தனிப்படை போலீசார் இறங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுகளில் இந்த கும்பல் சரணடையாமல் தடுக்க வசதியாக அம்மாநில போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் அங்கு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications