Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதி ஆணவக்கொலைக்கு பயந்து போலீஸிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி - வீடியோ

பெற்றோர் தங்களை ஆணவக்கொலை செய்துவிடலாம் என்று அஞ்சி காரைக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி தன் காதலியுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: பெற்றோர்கள் தங்களை ஆணவக்கொலை செய்துவிடுவார்கள் என கூறி, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிக்கு மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகளவு ஆணவக் கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். தமிழ்நாட்டில் நடந்த சாதி ஆணாவக் கொலைகளில் தர்மபுரி இளவரசன், உடுமலை கோகுல் ராஜ் மரணங்கள் உலகையே உலுக்கியது.

 Karaikudai lovers afraid of murder and sought help from police.

இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரது மகன் முத்துபாண்டி ஒரு பெண்ணை ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

முத்துப்பாண்டி தன் காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் இருவரின் பெற்றோரும் தங்களை ஆணவக்கொலை செய்துவிடலாம் என அஞ்சி, காவல்துறை கண்காணிப்பாளார் கார்த்தியேகனிடம் தஞ்சம் அடைந்தனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயகன், காரைக்குடி மகளிர் காவல்நிலையத்துக்கு முத்துப்பாண்டி மற்றும் அவரது காதலிக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதையடுத்து அந்த ஜோடி மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+