காரைக்குடி பள்ளியில் களை கட்டிய குடியரசு தின விழா
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா 26-1-17 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமை வகித்தார். காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். உதவித் தலைமையாசிரியர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தேசியக்கொடி ஏற்றினார். தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர். பாகை.கண்ணதாசன் குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார். பள்ளி மேலான்மைக் குழுத் தலைவர் அழகுசுந்தரி வாழ்த்துரை வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் கோமதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி செய்திருந்தார்.













Click it and Unblock the Notifications