அன்று சபாநாயகரைக் காப்பாற்றிய எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை, நீதியற்றது! - புகழேந்தி வேதனை
அன்று சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது இந்த 18 எம்.எல்.ஏக்களும் அவரை காப்பாற்றினார்கள். ஆனால் அவர்களை இப்போது சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்டார் என கர்நாடக அதிமுக ந
மதுரை: சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அவருக்கு சாதகமாக வாக்களித்த எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் நீக்கியிருப்பது அறமற்றது என கர்நாடக அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழக சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது குறித்து, கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான திமுக சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

அப்போது அவருக்கு சாதகமாக வாக்களித்து அவரை சபாநாயகர் பதவியில் அமரவைத்த 18 எம்.எல்.ஏக்களை தற்போது சபாநாயகர் நீக்கியிருப்பது வேதனையான விஷயம். அதில் கொஞ்சமும் நீதியில்லை.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, நிச்சயம் அதில் வெற்றிபெறுவோம் என்று புகழேந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications