ஜெ. சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு -தமிழகத்தில் கர்நாடக பஸ்கள் நிறுத்தம்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
மேல்முறையீட்டு முடிவால் பாதுகாப்பு கருதி சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் புளிஞ்சூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு வந்து செல்லும் கர்நாடகா அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
அதேபோல கர்நாடகா மாநிலத்திலிருந்து ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்கப்பட்ட கர்நாடகா அரசு பேருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகா மாநிலத்திற்கு செல்லவிருந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடாக செல்லும் 50க்கும் மேற்பட்ட கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications