"கப்சிப்"பென்று காவிரியில் 217 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்ட கர்நாடகா....!
சென்னை: காவிரியில் நடப்பாண்டில் இதுவரை 217 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதாம். இது காவிரி டிரிப்யூனல் நிர்ணயித்த அளவை விட 30 டிஎம்சி கூடுதல் என்கிறார்கள் தமிழக அரசுத் தரப்பில்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும். இதில் மாதா மாதம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது முதற்கொண்டு கர்நாடகம் ஆண்டுதோறும் தண்ணீரை எப்படி, எந்த காலகட்டத்தில் வழங்க வேண்டும் என்பதையும் நடுவர் மன்றம் தெளிவாக நிர்ணயித்துள்ளது.

ஜூன் முதல் அடுத்த ஜூன் வரை இந்த காலகட்டம் அடங்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மார்ச் வரை காவிரியில் 217 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளதாம். இது (இந்த காலகட்டத்தில்) காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக, 30 டி.எம்.சி. தண்ணீராகும்.
ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும். இருப்பினும் ஏப்ரல் மாதம் இதுவரை 1.4 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அடுத்துள்ள மாதத்திலும் கர்நாடகம் நிர்ணயித்த அளவுக்கு தண்ணீரைத் திறந்து விட்டால் தமிழகத்தின் நீர்ப் பிரச்சினை வெகுவாக தீரும்.
கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபிணி ஆகியவற்றில் போதிய அளவுக்குத் தண்ணீர் உள்ளது. இரு அணைகளிலும் சேர்த்து மொத்தமாக 32 டிஎம்சி அளவுக்கு நீர் உள்ளது. எணவே கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் இல்லை என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications