கையைப் பிடித்து.. காலைத் தொட்டு.. கார்த்திக்கின் கடைசி கட்ட களேபரப் பிரசாரம்!
ராஜபாளையம்: தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்த நடிகர் கார்த்திக் வாக்காளர்களின் காலைப் பிடித்தும், கையைப் பிடித்தும் வாக்கு கேட்பதாக கூறினார்.
கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தோள் கொடுக்க வந்தவரான கார்த்திக் ஆங்காங்கே பிரசாரம் செய்து வருகிறார்.
தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக அவர் ராஜபாளையத்தில் பிரசாரம் செய்து பேசினார். இதே ராஜபாளையத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது சரணாலயம் அமைப்பின் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜபாளையத்தில் நடந்த பிரசாரத்தின்போது உருக்கமாக பேசினார் கார்த்திக். அதிலிருந்து சில...

கிவ் தெம் எ பிக் ஜீரோ...
இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளுக்கும் பரிசாக ஜீரோ கிடைக்க வேண்டும்.

2வது சுதந்திரப் போராட்டம்
1947-ம் ஆண்டைப் போல 2014-ல் 2-வது சுதந்திர போராட்டம் நடந்து வருகிறது. இதில் நாம் ஜெயித்தே ஆக வேண்டும்.

என்னை பாகிஸ்தானுக்கு அனுப்புவீங்களா..
பா.ஜ.கவுடன் பீகாரில் கூட்டணி வைத்துள்ள கட்சியின் வேட்பாளர், மோடி பற்றி தவறாக பேசினால் பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று கூறி உள்ளார். அவர் என்னை அங்கு அனுப்ப முடியுமா?

அந்தமானுக்கு அனுப்பனும் அவரை
மோடியை அந்தமான் தீவுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் அவரை யாரும் தொந்தரவு செய்ய முடியாது.

பணம் தருவது காங்கிரஸ்தான்
தேசப்பற்று உள்ள யாரும் அவருடன் கூட்டணி வைக்க மாட்டார்கள். 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது, உங்கள் பணம் உங்களுக்கே எனத் தருவது காங்கிரஸ்.

பேட்டி கொடுக்கத்தான் லாயக்கு
எதிர்க்கட்சியினருக்கு பாராளுமன்றக்கூட்டத்தில் எந்த மசோதாவையும் தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, வெளியேறி அனைத்து தேசிய தொலைக் காட்சிகளிலும் பேட்டி அளிக்கத்தான் தெரியும்.

கையைப் பிடித்து.. காலைத் தொட்டு
வரும் தேர்தலானது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தர்ம யுத்தம். சாதி, மதவெறி பிடித்தவர்களை ஆட்சியில் ஏற்றக் கூடாது என்று உங்கள் கை பிடித்து, காலைத் தொட்டு கேட்கிறேன் என்றார் கார்த்திக்.

ஒரே தள்ளுமுள்ளு
பேசி முடித்து விட்டு காரைப் பார்க்க கிளம்பிய கார்த்திக்கைக் காண தொண்டர்கள் முண்டியடித்ததால் ஒரே தள்ளுமுள்ளாகி விட்டது. போலீஸார் உடனே தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டியடித்தனர்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications