என்னிடம் விளக்கம் கேட்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை: கார்த்தி பொளேர்
சென்னை: என்னிடம் விளக்கம் கேட்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் என்பதால், அகில இந்திய காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னையில் எனது நண்பர்களுக்கு மதிய உணவு அளித்தபோது அந்த கூட்டத்தில் காங்கிரசின் சின்னத்தையோ, கொடியையோ பயன்படுத்தவில்லை. கூட்டத்தில் பேசியிருந்ததை முழுமையாக கேட்டிருந்தால் இளங்கோவன் எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வாய்ப்பில்லை. காங்கிரசின் கொள்கைகளுக்கோ, கோட்பாட்டிற்கோ நான் குந்தகம் விளைவிக்கவில்லை.
இது குறித்து இளங்கோவன் அகில இந்திய ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு புகார் தெரிவித்து, அந்த கமிட்டி விளக்கம் கேட்டால் பதில் அளிக்க தயார். ஆனால் இது குறித்து விளக்கம் கேட்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications