கருணாநிதி அதே தொகுதியில் போட்டியிடலாம்.. ஜெ., விஜயகாந்த் தொகுதி மாறலாம்!
சென்னை: சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் கசிந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அதன் தலைவர் கருணாநிதி, அதிமுக சார்பில் ஜெயலலிதா, தேமுதிக சார்பில் விஜயகாந்த், பாமக சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அந்த 4 பேரும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்சபை தேர்தலில் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தனக்கு ராசியான எண் 11 கொண்ட திருவையாறு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. திருவையாறு தொகுதியின் எண் 173. அதை கூட்டினால் 11 வரும். இதற்கிடையே உடல் நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தகுதியில் போட்டியிடக்கூடுமாம். முன்னதாக அவர் கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.












Click it and Unblock the Notifications