உடல்நலக் குறைவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் கருணாநிதி பங்கேற்கவில்லை
உடல்நலக் குறைவால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.
சென்னை: சட்டசபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோருகிறார். அவருக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் புதிய கொறடா நியமிக்கப்படாததால் சர்ச்சையும் வெடித்து வருகிறது. அதிமுகவின் கொறடாவை சசிகலா தரப்பு அறிவிக்காத நிலையில் ஓபிஎஸ் அணி செம்மலையை அறித்துள்ளது.
இதனிடையே உடல்நலக் குறைவால் திமுக தலைவர் கருணாநிதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆகையால் திமுகவின் 89 எம்.எல்.ஏக்களில் 88 பேர் மட்டுமே எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர்.
அரை நூற்றாண்டுகாலம் தமிழக அரசியலில் முதன்மை அடையாளமாக இருந்து வருபவர் கருணாநிதி; 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் வரலாற்றில் இடம்பெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கருணாநிதி பங்கேற்க முடியாமல் போனது அக்கட்சி தொண்டர்களை வருத்தப்பட வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications