“கொலை”க்”கஞ்சா” மாநிலமாகத் மாறி வருகிறது தமிழகம் - கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் பத்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மேற்கோள் காட்டி, "கொலை"க்"கஞ்சா" மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேள்வி :- தமிழகத்தில் ஒரே நாளில் பத்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளதே? ஆட்சியினர் என்னதான் செய்கிறார்கள்? பத்து பேரா? இருங்கள் எண்ணிப் பார்க்கிறேன்.

1. நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே அ.தி.மு.க. கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவருடைய தம்பி மாரியப்பன் ஆகியோர் பட்டப் பகலில் பேருந்தில் வந்தபோது அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 3. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 6ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காளீஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை. 4. தேவகோட்டை அருகே கீழவயலைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் படுகொலை. 5. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ரமேஷ் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 6. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பெட்ரோல் பங்க் எதிரே ஸ்ரீதர் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 7. மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் அரிவாள்களால் வெட்டிக் கொலை. காதல் தகராறில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறதாம். 8. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மனோஜ் குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, காரை ஏற்றிக் கொலை. 9. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே தாமரைக்குளத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் முத்தையா என்பவர் கொலை. 10. சென்னை அடையாறு ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு பத்து பேர் ஒரே நாளில் "அம்மா"வின் ஆட்சிப் பரிபாலனத்தில் படுபாதகமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு ஏன்? தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பாதுகாப்பையெல்லாம் மீறி வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார்.
13-7-2016 அன்று மட்டும் சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்தில் 95 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டி.பி. சத்திரத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் வெட்கக் கேடு! தமிழகக் காவல் துறையில் டி.ஜி.பி.யாக பணியாற்றிய, தற்போது மாநிலத் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பில் அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராமானுஜம் அவர்களே சேலம் சென்ற போது தாக்கப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. அதையெல்லாம் தொகுத்து நாளிதழ் ஒன்றில் "தமிழ்நாடு கொலை நாடு" என்றே தலைப்பிட்டு கட்டுரை தீட்டியுள்ளது. மொத்தத்தில் "கொலை"க்"கஞ்சா" மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications