கருணாநிதி சட்டசபைக்கு வந்தார்.. கையெழுத்துப் போட்டார்.. இருக்கை வசதி இல்லாததால் கிளம்பிச் சென்றார்!
சென்னை: சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த திமுக தலைவர் கருணாநிதி, பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு புறப்பட்டார். சட்டசபையில் தனக்கு போதிய இருக்கை வசதி செய்து தராததால் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என அப்போது கருணாநிதி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிர்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவியை அவர் இழந்தார். எனவே, தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை தந்துள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த போது, ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் சட்டசபைக்கு வருகை புரிந்தார். அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.
அப்போது, ‘முன்னதாக தான் கூறியது போல தனக்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய கருணாநிதி, மக்கள் பிரச்சினைகளைப் பேச இந்த மூன்று நாள் சட்டசபைக் கூட்டம் மட்டும் போதாது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications