சோர்வின்றி வலம் வரும் களைப்பறியா கருணாநிதி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
சென்னை: மாவட்டக் கழகத்தின் செயலாளர்களே, முன்னாள் அமைச்சர்களே, தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களே, கழகத்தினுடைய செயல் வீரர்களே, பெரியோர்களே, தாய்மார்களே... இந்த வார்த்தைகளை அந்த 90 வயது வாய்... உதிர்க்கும் வரை அமைதி காக்கும் அந்த பெரும் கூட்டம்...என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.. என்று சொல்லி நிறுத்தும்போது அப்படி ஒரு 'அப்ளாஸ்'... ஒரு மாபெரும் இயக்கத்தை காலாகாலமாக கட்டிப் போட்டு வைத்திருக்கும் அந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான் அத்தனை கூட்டம் காத்திருந்தது.
களைப்பறியா அந்த உதயசூரியன் அடுத்தடுத்து அடுக்கடுக்காக அருவியாக கொட்டி முழங்கிய ஒவ்வொரு பேச்சையும் கண் கொத்திப் பாம்பாக உன்னித்துக் கவனித்து ஆர்ப்பரிக்கிறது கூட்டம்..
இந்த வயதிலும் சோர்வறியாமல், தடுமாறாமல், வார்த்தைகளைத் தேடாமல், நீர்வீழ்ச்சி போல பாய்ந்து வரும் வார்த்தைகளையும், டைமிங் வசனங்களையும் .. நாசூக்கான நக்கல் நையாண்டிகளையும் இத்தனை காலமாக கேட்டும், சற்றும் அலுத்துப் போகாமல் தலைவா என்று முழக்கத்துடன் ஆர்ப்பரித்து சந்தோஷித்துக் களைகிறது திமுகவின் தொண்டர் படை.
எல்லாத் தேர்தல்களிலும் பட்டி தொட்டியெங்கும் முழக்கமிடத் தவறாத திமுக தலைவர் கருணாநிதி, இந்த முறை சூறாவளி சுற்றுப்பயணம் போகாவிட்டாலும் கூட அவரது வருகை திமுகவினருக்கு நிம்மதிப் பெருமூச்சு அளிக்கும் தென்றலாக தவழ்ந்து கொண்டுதான் உள்ளது.
வாருங்கள் கருணாநிதியின் சுற்றுப் பயணத்தை ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வரலாம்..
காஞ்சியில் கூடிய கூட்டம்
இது காஞ்சிபுரத்தில் கருணாநிதியின் பிரசாரத்தைப் பார்க்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் கூடியிருந்த கூட்டம்.
இதயக் கனிக்கு ஒரு அஞ்சலி
அண்ணனின் நினைவிடத்தில் தம்பியின் இதய அஞ்சலி... மலர் தூவி.. மலரும் நினைவுகளை மனதுக்குள் தேக்கியபடி....
இல்லத்துக்குள் ஒரு நினைவு உலா
அண்ணாவின் நினைவிடத்திற்குள் சகாக்களுடனும், துணைவியாருடனும் ஒரு நினைவு உலா.
மடை திறந்த பேச்சு
இது காஞ்சிபுரம் பிரசார மேடையில்.. பிரசார உரை நிகழ்த்தியபோது....
வெளியில் வெயில்.. வேனுக்குள் சூரியன்
வெளியில் தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல்,. வேனுக்குள் அமர்ந்திருக்கும் சூரியனை தரிசிக்க அலை மோதும் தொண்டர் கூட்டம்...
இது கைவிடாத 'கை'
அந்தக் 'கை' கைவிட்டாலும் கூட இந்தக் 'கை' என்றென்றும் உன்னைக் கைவிடாது என்று புன்னகை பூக்க தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறாரோ...!
திருப்பெரும்புதூரில் திரண்ட இளம் சூரியன்கள்
இது ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்த கருணாநிதியைக் காணக் கூடியிருந்த இளைஞர் பட்டாளம்.
அடடே.. போனில் நான் தெரிகிறேனே...!
இது ஓய்வின்போது தன்னைத் தானே பார்த்து ரசிக்கும் ஒரு ஜாலி காட்சி.....
பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. தலைவரை... இது பிரசாரத்தின்போது தொண்டர்கள் சொன்னது!