தை முதல் நாளே தமிழ் புத்தாண்டின் முதல் நாள் என்று கொண்டாடுங்கள்... கருணாநிதி வாழ்த்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் வாழ்த்து என்ற பெயரில் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொங்கல் திருநாள் இன்று - தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளும் இன்று தான்! இந்த நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் - மா, பலா, வாழை என்று முக்கனித் தருக்களை நாட்டி - வண்ண வண்ணக் கோலங்களிட்டு - வரிசை வரிசையாய் விளக்குகளால் ஒளியுமிழ் அலங்காரம் செய்து - வீடுகள் எல்லாம் எழில் காட்டிட - புத்தாடை புனைந்து - தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும், ஆடியும்
சமத்துவ உணர்வு பரப்பியும் - தை முதல் நாளே, தமிழர் புத்தாண்டுத் திருநாள் என்று உரக்கக் கூவி, தமிழரெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திட வேண்டுமென்று என்னுடைய இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.