கருணாநிதியை பார்க்க நாளை சென்னை வருகிறார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை சென்னை வருகிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி விரைவில் குணமடைவார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மற்றும் தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க வெங்கையா நாயுடு கருணாநிதியை நேரில் சந்திக்க உள்ளார்.