7 தமிழர் விடுதலை வழக்கு - கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

Karunanidhi keeps mum on SC decision on Seven Tamils release case

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்:

கேள்வி: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை அரசியல் சாசன பெஞ்சுக்குமாற்றி உள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இவைகள் எல்லாம் வழக்கு விஷயங்கள். இவைகள் நீதிமன்ற விவகாரங்கள் ஆதலால், இது குறித்து நான் அதிகமாக கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துரைமுருகன் பேட்டி

முன்னதாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியிடம் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலரான துரைமுருகன், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+