For Daily Alerts
Just In
கருணாநிதியும் தீவிரப் பிரசாரத்தில் குதிக்கிறார்- ஏப். முதல் வாரத்தில் பிரசாரம்?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும் லோக்சபா தேர்தல் பிரசாரக் களத்தில் இறங்குகிறார். ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து அவர் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
தன்னால் தமிழகம் முழுவதும் சுற்றி வர முடியாவிட்டாலும் இயன்ற வரை பிரசாரம் செய்வேன் என்று ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரசார வேன் மூலம் முக்கியத் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 35 தொகுதிகளில் திமுகவும், 5 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் கருணாநிதி பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது. கூட்டங்களிலும் அவர் பேசவுள்ளார்.
Comments
English summary
DMK chief Karunanidhi is planning for campaign in LS election soon.
Story first published: Thursday, March 13, 2014, 17:42 [IST]