திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது- கருணாநிதி பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது அது மேலும் மேலும் வளரும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற பெயரில் தி.மு.க பொதுக் கூட்டம் சென்னை தங்க சாலையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் கருணாநிதி பேசியதாவது: நான் வெற்றி, தோல்வி குறித்து கவலைபடுவன் அல்ல. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் வலுவான எதிர்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.

Karunanidhi Speech public meeting

வெற்றி, தோல்வியால் தி.மு.க வீழ்ந்து விடாது. பல தேர்தல்களில் தோல்விகளை சந்திந்து இருக்கிறோம். ஆனால், திமுக இன்று வரை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை வீழ்த்துவதற்கு பலரும் முயற்சி செய்கிறார்கள்.

யாருடைய அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஒருநாளும் அஞ்சாது. தி.மு.க. உடன் பிறப்புக்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்து மேலும் இயக்கத்தை வளர்ப்பார்கள்.

Karunanidhi Speech public meeting

சூழ்ச்சி செய்து திமுகவை வீழ்த்த நினைத்தவர்களுக்கு தகுந்த தீர்ப்பு கிடைக்கும். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரால் எத்தனையோ அநீதிகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் திமுக என்றுமே அஞ்சியது கிடையாது.

திமுகவின் கருத்தை கம்பீரமாக எடுத்து சொல்லும் காலம் விரைவில் வரும். திமுகவின் கருத்துக்களை மக்களிடம் எப்படி எடுத்து கூறுவது என்பது பற்றியும், நம்மை அர்பணித்து கொள்கின்ற வகையில் ஆழமான போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+