திருவள்ளுவர் சிலை... உத்தர்கண்ட் முதல்வருக்கு கருணாநிதி நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வரும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வரவேற்பு இல்லை என்று செய்திகள் வந்தன.

Karunanidhi thanked Utterkhand CM

இதற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் திருவள்ளுவர் சிலை அப்புறப்படுத்தப்படவில்லை. வேறு இடத்தில் விரைவில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் உணர்வுகளை உத்தரகண்ட் அரசு மதிக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத் அடுத்த சில நாள்களில் திருவள்ளுவருக்கு கெளரவம் அளிக்கும் வகையில் அவரது சிலையை நிறுவிட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இது, ஏற்பட்ட மனக் காயத்துக்கு மருந்து தடவுவதாக அமைந்துள்ளது. அதற்காக தமிழ் உணர்வு படைத்த மக்களின் சார்பில் உத்தரகண்ட் முதல்வருக்கு நன்றி.

எனவே, தமிழர்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்து விட்ட இந்தப் பிரச்னை குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+