பிரதமருக்கு மனசாட்சி உண்டு.. அதன்படி முடிவெடுத்தால் போதும் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi urges PM not to attend CHOGM, once again
சென்னை: பிரதமருக்கு மனசாட்சி உண்டு. அந்த மனசாட்சிப்படி பிரதமர் நடந்து கொண்டால் போதும் என்று காமன்வெல்த் மாநாடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்கள்...

செய்தியாளர்: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது பற்றி டெல்லியில் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் செல்வதைப் போல முடிவெடுப்பார்கள் என்று சொல்கிறார்களே?

பதில்: அமைச்சரவையில் என்ன பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

செய்தியாளர்: பிரதமர் கலந்து கொள்வதாக முடிவெடுத்தால், மத்திய அரசுக்கு தி.மு. கழகம் மத்திய அரசுக்கு வெளியே இருந்து கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஆதரவைத் திரும்பப் பெறுமா?

பதில்: நாங்கள் ஏற்கனவே மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி விட்டோம். வெளியிலிருந்து ஆதரவு என்பதல்ல இப்போது பிரச்சினை. பிரதமருக்கு மனச்சாட்சி உண்டு. அந்த மனச்சாட்சிபடி பிரதமர் நடந்து கொண்டால் போதும். இந்தியாவின் சார்பில் பிரதமரோ, வேறு யாருமோ இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற என்னுடைய வேண்டுகோளை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி தெரிவித்தார்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+