நிர்மலா தேவி 50 வயசான ஒரு கிழவி.. கோர்ட்டில் கோபம் காட்டிய கருப்பசாமி!
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவி 50 வயசான ஒரு கிழவி என்று கருப்பசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல தூண்டியதாக நிர்மலா தேவியும் இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் 200 நாட்களுக்கு மேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ரகசிய நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் முருகன், கருப்பசாமி தரப்போ இவற்றை திறந்த நீதிமன்றத்தில்தான் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
[எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து.. போலீஸ் கெடுபிடியை மீறி முருகன் பரபர பேட்டி!]
கேள்வி
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மூவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரபட்டனர். அப்போது கருப்பசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
வாக்குமூலம்
அதற்கு அவர் நாங்கள் நிர்மலா தேவியை மூளைச்சலவை செய்ய அவரென்ன குழந்தையா. 50 வயது நிறைந்த கிழவி, பாட்டி, ஒரு பேராசிரியர். அவருக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியாதா என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்த கருப்பசாமியுடன் காரில் உறவு வைத்துக் கொண்டதாக நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வீடு வரை
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகனுடன் நிர்மலா தேவிக்கு தொடர்பு ஏற்பட்டதை அடுத்து அவர் அறிமுகம் செய்து வைத்ததால் கருப்பசாமியை தனக்கு தெரியும் என்று நிர்மலா தேவி கூறியுள்ளார். மேலும் ஒரு நாள் கருப்பசாமியை சந்தித்து விட்டு தனது காரில் அவரை அவரது வீடு வரை விட்டுவிட்டு வர சென்றேன்.
நிர்மலா தேவி வாக்குமூலம்
அப்போது யாரும் இல்லாத சாலையில் காரை நிறுத்திவிட்டு நானும் கருப்பசாமியும் உல்லாசமாக இருந்தோம் என கூறியுள்ளார். அப்போதுதான் கல்லூரி மாணவிகள் வேண்டும் என பல முறை கேட்டதாகவும் நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.