Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி பவுர்ணமி! திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! கையில்ஆயுதத்துடன் தெரிந்த உருவம்! பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பவுர்ணமியையொட்டி 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். அப்போது ஒரு முகம் வெளியே தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வந்தால் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதால் இங்கு மக்கள் அவ்வப்போது சென்று வருகிறார்கள்.

karuppasamy tiruchendur pournami

அதே நேரம் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்கும் என்பார்கள்.

அது போல் புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நீராடி விட்டு முருகனை தரிசித்து சென்றனர். அப்போது திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென 50 அடிக்கு கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்தனர். உடனே அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

karuppasamy tiruchendur pournami

இதை கண்ட போலீஸாரும் பக்தர்கள் யாரும் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இந்த நிலையில் அந்த உள்வாங்கிய இடத்தில் ஒரு உருவம் தெரிந்தது. அது என்ன என போய் பார்த்த போது கருப்பசாமி சிலை. உடனே பக்தர்கள் அதை எடுத்து வந்து பக்தி பரவசமடைந்தனர். இந்த நிலையில் அந்த சிலையை என்ன செய்ய போகிறார்கள், கோயிலேயே பிரதிஷ்டை செய்ய போகிறார்களா, இல்லை அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க போகிறார்களா என தெரியவில்லை.

மேலும் இது கடத்தல் சிலையா இல்லை எங்கிருந்தாவது அடித்து வந்ததா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் காற்றழுத்தம் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் தமிழகம், ஆந்திராவில் உள்ள கடற்கரைகள் ஆக்ரோஷமாக இருந்தன. கன்னியாகுமரி, நாகை , மாமல்லபுரம் உள்ளிட்ட கடற்கரைகள் கொந்தளித்தன. அலைகளின் சீற்றமும் அதிகமாகவே இருந்தன. அந்த வகையில் திருச்செந்தூர் கடற்கரையில் நீர் உள்வாங்கியது. அதில் பாசிகள் தெரிந்தன.

karuppasamy tiruchendur pournami
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+