ஆதரவாளர்கள் புடை சூழ கோர்ட்டிற்கு வந்து சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார் கரூர் அன்புநாதன்!
கரூர்: சட்டசபைத் தேர்தல் சமயத்தில் ரூ. 5 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதன் இன்று கரூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
சட்டசபைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் பண வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கரூரைச் சேர்ந்த அன்புநாதன் வீடு மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டதில் 4 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அன்புநாதன் தலைமறைவானார். அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினார் அன்புநாதன். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று கரூர் முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நேரில் ஆஜரானார் அன்புநாதன். நீதிபதி ரேவதி முன்பு ஆஜரான அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி தினசரி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அன்புநாதன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கோர்ட்டுக்கு வந்த அன்புநாதனை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை அன்புநாதனுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications