தொடர்மழை... கரூரில் அமராவதி ஆற்றில் வெள்ளம்... கலெக்டர் நேரில் ஆய்வு
கரூர்: கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரூரில் அமராவதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக அணைகள், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் உள்ள அமராவதி அணை முழுகொள்ளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து சுமார் 37ஆயிரம் கனஅடிநீர் திறந்து விடப்பட்டது.
உடுமலைபேட்டையில் துவங்கும் அமராவதி ஆறு கடைமடை பகுதியான கரூர் வரை பாய்கிறது. அமராவதி ஆற்றில் அதிகமான நீா் வெளியேற்றப்படுவதால். ஆற்று கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டது.

வெள்ளம்...
இந்நிலையில் அமராவதி ஆற்றின் துணை ஆறான நங்காஞ்சி ஆறு, குடகனாறு, சண்முகாநதி இவற்றிலிருந்து வெளியான உபரிநீர்களும் அமராவதி ஆற்றில் கலந்துவிடுவதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேரில் ஆய்வு...
இதனை அடுத்து வெள்ளத்தை கரூா் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல் குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கரூா் பசுபதிபாளையத்தில் வழியாக செல்லும் அமராவதி ஆற்றை பார்வையிட்டனா்.

குறைவான மழை...
கரூா் மாவட்டத்தின் ஆண்டு மழையளவு 652.2.மி.மீ. ஆகும். அக்டோபா் மாதம் முடிய கிடைக்க வேண்டிய சராசரி மழையான 493.7 மி.மீ.க்கு நடப்பு மாதம் வரை 298.2 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது சராசரி மழை அளவைகாட்டிலும் 40 சதவீதம் குறைவாகவே பெறப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு...
தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை பொருத்தளவில் சாராசரி குறைந்தளவே மழை பெய்துள்ளன. ஆனால் கடந்த சில பத்துநாட்களாக வடகிழக்கு பருவமழை சாரசரியில் மூன்றில் ஒரு பங்கு மழையானது மாவட்டத்தில் 101.2 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

மொத்த மழையளவு...
அதன்படி மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியில் - 97 மி.மீட்டரும், க்.பரமத்தி - 27.80, குளித்தலை- 1.50, மாயனூர் -6, கரூா் -6, அணைப்பாளையம் - 52, தோகைமலை -17,பஞ்சப்பட்டி - 11.20, பாலவிடுதி - 24.40, கடவூா் -10.20, கிருஷ்ணராயபுரம் -7, மைலம்பட்டி -5 என இம்மாவட்டத்தில் மொத்தம் 265.10 மி.மீ மழை பெய்துள்ளது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
டெல்லி புறப்பட்டார் செந்தில்பாலாஜி.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜர்! கூடவே ராஜீவ் காந்தி -
ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!











Click it and Unblock the Notifications