நாயுடு கொடும்பாவி எரிப்பு... கரூர் வக்கீல்கள் ஆவேசப் போராட்டம்
கரூர்: 20 தமிழர்களைக் கோரமாக கொலை செய்த ஆந்திர அரசை பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று கோர்ட் வேலைகளை புறக்கணித்ததோடு வெளியே வந்த வழக்கறிஞர்கள் ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதோடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை காலணியால் அடித்து, உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும் இச்சம்பவத்திற்கு முற்றிலும் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வலியுறுத்தியும் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து கரூர் கோர்ட்டில் இன்றும், நாளையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications