பிரசவத்தின்போது பெண் திடீர் மரணம்... இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த பரிதாபம்!
கரூர்: ஊட்டியைத் தொடர்ந்து கரூரில் பிரசவத்தின்போது இளம் பெண் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியில் கடந்த 24 ஆம் தேதி முதல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள் ஐந்து பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கால், அப்பெண்கள் பலியாகி இருக்கலாம் என உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுதான் இளம்தாய்மார்களின் மரணத்துக்கு காரணம். மருத்துவர்களின் சிகிச்சை காரணமே அல்ல என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அதே போல ரத்தப் போக்கு காரணமாக இன்னொரு இளம் தாய், கரூர் அரசு மருத்துவமனையில் இன்று மரணத்தைச் சந்தித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வெள்ளையக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (27) இவரது மணைவி சித்ரா (24). இவர்களுக்கு ஏற்கனவே, நிஷாந்த் (1) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக சித்ரா கரூர் அரசு மருத்துவமணையில் கடந்த 17ந்தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இரட்டை குழந்தை வயிற்றில் இருப்பதை டாக்டர்கள் ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர். இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அறுவைச் சிகிச்சைக் கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சித்ராவிற்கு முதலில் ஒரு ஆண்குழந்தை நார்மலாக பிறந்துள்ளது. அடுத்த குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சித்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்து இன்னொரு ஆண் குழந்தை எடுக்கப்பட்டது. பின்னர் அவரை வார்டுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் சித்ராவிற்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இதுகுறித்து டாக்டர் மற்றும் நர்ஸ்களிடம் சித்ராவின் உறவினர்கள் தெரிவித்தபோது அவர்கள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் உடல்நிலை மோசமடைந்து சற்று நேரத்தில் சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் டாக்டர்களைக் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications