கத்தி திரைப்பட பாணியில் சென்னையை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் ஆதரவு போராட்டம்!
விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில், விவசாயிகளின் கஷ்டத்தை சென்னைவாசிகள் தெரிந்துகொள்ள, சென்னைக்கு வரும் தண்ணீர் பைப்புகளை அடைக்கும் விதமாக போராட்டம் நடைபெறும். அதேபோல டிராபிக் பிரச்சினையை ஏற்படுத்தி போ
சென்னை: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையில் இன்று சென்னையில் திடீரென போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
சென்னை கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கிப்போயின. கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை, அதேபோல சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியவில்லை.
இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். கிண்டி முக்கிய பகுதி என்பதால் சென்னை நகரம் முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போராட்ட களம்
இதை உணர்ந்துதான் போராட்டக்காரர்கள் கிண்டி, மேம்பாலத்தை போராட்ட களமாக தேர்ந்தெடுத்துள்ளனர். விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில், விவசாயிகளின் கஷ்டத்தை சென்னைவாசிகள் தெரிந்துகொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டி, சென்னைக்கு வரும் தண்ணீர் பைப்புகளை அடைக்கும் விதமாக போராட்டம் நடைபெறும்.

கத்தி திரைப்படம்
இதனால் சென்னையில் குடிநீருக்கும், குளிக்கவும் கஷ்டம் ஏற்படும். மொத்த மீடியாக்களும், இப்போராட்டத்தை ஒளிபரப்பு செய்யும். இதன்பிறகே கிராமங்களில் நடந்து வரும் அக்கிரமங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து, மக்களின் நெருக்கடி காரணமாக விடிவுகாலம் பிறக்கும்.

விஜய் பட பாணி
இதேபோல சென்னையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து தலைநகர மக்களின் கவனத்தை ஈர்க்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். எனவேதான் அவர்கள் கிண்டியை தேர்ந்தெடுத்ததுள்ளனர். விமான நிலையத்திலிருந்து சிட்டிக்குள் வரும் விஐபிகள் இந்த சாலையை பயன்படுத்துவார்கள். அவர்களை போராட்டத்தின் சூடு எட்ட வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் நோக்கம்.

இதையும் கவனிக்கவும்
அதேநேரம், அவசரமாக மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும், இதில் சிக்கிக்கொண்டது என்பது கவனிக்க வேண்டியது. இந்த விஷயத்தையும் போராட்டக்காரர்கள் கவனித்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications