நீதிதேவதை வேடமிட்ட சிறுமியிடம் பொதுமக்கள் மனு: ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் நூதனப் போராட்டம்
கதிராமங்கலத்தில், கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்ட சிறுமியிடம் பொதுமக்கள் மனு கொடுத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
கும்பகோணம்: கண்ணில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்ட சிறுமியிடம் கதிராமங்கலம் கிராம மக்கள் மனு கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கைதான 10 பேரை விடுவிக்கக் கோரியும் கடந்த 1ம் தேதி முதல் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த மாதம் 12ம் தேதி முதல் கதிராமங்கலம் எல்லை அய்யனார் கோயில் திடலில் முகாமிட்டு அங்கேயே தங்கி சமைத்து உண்டு காத்திருப்பு போராட்டத்தை ஊர் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் நீதிதேவதை போன்று வேடமிடப்பட்ட சிறுமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தார். அவரிடம் பொதுமக்கள் அனைவரும் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து 28வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. என்றாலும் தமிழக அரசு இதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அமைதி காக்கிறது. இது கதிராமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications