Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உடைந்து அழுத சசிகலா - "கத்துக்குட்டி" இரா. சரவணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு மருத்துவமனையில் சசிகலா உடைந்து அழுதார் என்று கத்துக்குட்டி திரைப்பட இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இதய முடக்கம் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி திமுக, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வெள்ளை அறிக்கை கேட்டு வருகின்றனர். ஆனால் அப்பல்லோ நிர்வாகமே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எப்படி நடந்து கொண்டார் என்று கூறியுள்ளது.

 Kathukutty Saravanan's interview on Jayalalitha's final minutes

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நல்ல நிலையில் உடல்நிலையில் தேறி வந்தார் என்றும், அவரால் பேச முடியவில்லை என்றும் திரைப்பட இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் 2-ம் மாடியில் இருந்தார் இயக்குநரும் பத்திரிகையாளருமான சரவணன். அவர் சன் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, தனக்கு தேவையானவற்றை அருகில் இருந்த சிலேட்டில் எழுதி காட்டுவார். கையெழுத்து போடும் அளவிற்கு உடல் நிலை தேறி வந்தார் என்றும் சரவணன் கூறியுள்ளார். கடைசி நாளில் அவரது மரணம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் கூறிய உடன் ஜெயலலிதா இருந்த அறைக்குள் சென்று திரும்பிய சசிகலா, கிராமத்தில் இருப்பவர்கள் துக்கம் தாளாமல் அழுவது போல சசிகலா உடைந்து அழுதார் என்றும், இருமுறை தேம்பி தேம்பி அழுதார் என்றும் கூறியுள்ளார் சரவணன்.

ஜெயலலிதாவை 75 நாட்களும் யாருமே பார்க்க வில்லை. சசிகலா மட்டுமே பார்த்தார். நோய் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதால்தான் யாரையும் பார்க்க விடவில்லை. அதோடு மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில் தன்னை பார்க்க ஜெயலலிதா யாரையும் அனுமதிக்க வில்லை மருத்துவர்கள், நர்ஸ்கள் மட்டுமே பார்த்தார்கள் என்றும் சரவணன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள், அவரது மரணத்திற்கு முன்பாக அப்பல்லோவில் நடந்தது என்ன? முதல்வராக ஒபிஎஸ்தான் வரவேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதாக சசிகலா கூறியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் சரவணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+