ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உடைந்து அழுத சசிகலா - "கத்துக்குட்டி" இரா. சரவணன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு மருத்துவமனையில் சசிகலா உடைந்து அழுதார் என்று கத்துக்குட்டி திரைப்பட இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.
சென்னை: அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இதய முடக்கம் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி திமுக, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வெள்ளை அறிக்கை கேட்டு வருகின்றனர். ஆனால் அப்பல்லோ நிர்வாகமே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எப்படி நடந்து கொண்டார் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நல்ல நிலையில் உடல்நிலையில் தேறி வந்தார் என்றும், அவரால் பேச முடியவில்லை என்றும் திரைப்பட இயக்குநர் சரவணன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் 2-ம் மாடியில் இருந்தார் இயக்குநரும் பத்திரிகையாளருமான சரவணன். அவர் சன் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதா, தனக்கு தேவையானவற்றை அருகில் இருந்த சிலேட்டில் எழுதி காட்டுவார். கையெழுத்து போடும் அளவிற்கு உடல் நிலை தேறி வந்தார் என்றும் சரவணன் கூறியுள்ளார். கடைசி நாளில் அவரது மரணம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் கூறிய உடன் ஜெயலலிதா இருந்த அறைக்குள் சென்று திரும்பிய சசிகலா, கிராமத்தில் இருப்பவர்கள் துக்கம் தாளாமல் அழுவது போல சசிகலா உடைந்து அழுதார் என்றும், இருமுறை தேம்பி தேம்பி அழுதார் என்றும் கூறியுள்ளார் சரவணன்.
ஜெயலலிதாவை 75 நாட்களும் யாருமே பார்க்க வில்லை. சசிகலா மட்டுமே பார்த்தார். நோய் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதால்தான் யாரையும் பார்க்க விடவில்லை. அதோடு மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில் தன்னை பார்க்க ஜெயலலிதா யாரையும் அனுமதிக்க வில்லை மருத்துவர்கள், நர்ஸ்கள் மட்டுமே பார்த்தார்கள் என்றும் சரவணன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள், அவரது மரணத்திற்கு முன்பாக அப்பல்லோவில் நடந்தது என்ன? முதல்வராக ஒபிஎஸ்தான் வரவேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதாக சசிகலா கூறியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் சரவணன்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications