தமிழ் மக்கள் வாழ்க.. மணக்க மணக்க வாழ்த்திய கட்ஜு!
தமிழ்நாட்டு மக்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நாட்டுக்கே நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டே கட்ஜு கூறியுள்ளார்.
டெல்லி: தமிழ் மக்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நல்ல பாடம் சொல்லிக்கொடுத்து விட்டனர். அவர்களைக் கண்டு பெருமைப்படுகிறேன். அவர்களது வருங்காலம் சிறக்கும், வாழ்க என்று கூறி வாயார வாழ்த்தியுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.
ஜல்லிக்கட்டு போர்க்களத்தில் கட்ஜுவும் ஒர் போர்வீரனாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு மக்களுக்கு பல வகையிலும் தனது முக நூல் மூலமாக, டிவி பேட்டிகள் மூலமாக, ஆலோசனைகள், கருத்துக்களை, யோசனைகளைக் கூறி கொண்டே இருந்தார்.

ஏன் தமிழர்கள் அமைதியாக இருக்கிறர்கள். அவர்களுக்குக் கோபமே வராதா. உங்களது எம்.பிக்களைப் பிடித்துக் கேள்வி கேளுங்கள் என்று கூட அவர் ஒருமுறை ஆவேசமாக கூறியிருந்தார். இதுவும் கூட தமிழக இளைஞர்கள், மனதில் சிறு பொறியை பற்ற வைத்திருக்க உதவியிருக்கலாம். அந்த வகையில் கட்ஜூவும் கூட இந்த பெருமை மிக புரட்சிப் போராட்டத்தில் முக்கிய பங்குகொண்டவர்தான். காரணம், தேசிய அளவில் ஜல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வுக்கான விதையைத் தூவியவர்களில் அவரையும் சேர்க்கலாம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களை வாழ்த்தி ஒரு போஸ்ட் போட்டுள்ளார் கட்ஜு. அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்ற தமிழ்நாடு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.
இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவமே, அது மக்கள் போராட்டமாக இருந்ததுதான். ஜாதி, மதங்களைக் கடந்து அது மாபெரும் இயக்கமாக, அனைவரும் பேதமில்லாமல் ஒருங்கிணைந்ததுதான் இதன் மிகப் பெரிய முக்கிய அம்சம். அனைத்து நம்பிக்கைகளையும் தவிடுபொடியாக்கி நீங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளீர்கள்.
ஒட்டுமொத்த தேசமும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும்., உங்களது போராட்டத்தை உதாரணமாகக் கொண்டு சிறந்த நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவார்கள்.
தமிழ் மக்கள் வாழ்க என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் கட்ஜு.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications