கவிக்கோ அப்துல் ரகுமான் இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது! மகன் வருகையால் தாமதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறுகிறது.
சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னை அருகேயுள்ள பனையூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநால் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால் கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications