கீழடியில் 3ம் கட்ட ஆய்வு தொடக்கம்.. அருங்காட்சியகம் அமைக்கப்படுமா… ஸ்ரீராம் விளக்கம்
தோண்டத் தோண்ட தமிழர் நாகரிகத் தொன்மங்கள் கிடைத்த கீழடியில் 3ம் கட்ட ஆய்வு இன்று தொடங்கியது. ஆய்வின் இறுதியில் அருங்காட்சியகம் வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மதுரை: கீழடியில் 3ம் கட்ட அகழாய்வு பணி இன்று காலை தொடங்குகிறது. மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் பணிகள் தொடங்கி உள்ளன.
மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5300 தொன்மம் மிக்க பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

3ம் கட்ட ஆய்வு தொடக்கம்
இதனைத் தொடர்ந்து, 3ம் கட்ட ஆய்வுப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் தொடங்கும் இந்த ஆய்வில் 15 தொல்லியலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆய்வின் முடிவு
இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆய்வின் முடிவில்தான் பல செய்திகள் தெரியவரும். இந்த இடத்தில் நிச்சயம் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் ஊராக வாழ்திருக்கிறார்களா, விவசாய நிலமாக இருந்ததா என்பதெல்லாம் ஆய்வின் முடிவில் வெளியாகும்.

அருங்காட்சியகம்
ஆய்வில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஆய்வு செய்த பின்னரே அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும். இது அரசின் கொள்கை முடிவாக உள்ளது. எனவே, அருங்காட்சியகம் வைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

ஆதரவிற்கு நன்றி
இந்த ஆய்விற்கு மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அனைத்து வகையிலும் உதவிகரமாக இருக்கின்ற மாநில அரசுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றேன். இந்த ஆய்வு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்ற ஸ்ரீராம் தெரிவித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications