For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதா உடல் நிலை.. கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் திடீர் நிறுத்தம்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளதால் கேரள பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை: மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால் கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. எனவே, தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆகையால், தமிழகத்திற்கு வரும் கேரள பேருந்துகள் குமுளி,கம்பம் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments
English summary
Chennai: Kerala buses halted at kambam and kumuli sources said.
Story first published: Monday, December 5, 2016, 16:40 [IST]