For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் கேரளா ரவுடி வெட்டிக் கொலை- முன்விரோதம் காரணமா என விசாரணை!
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் கேரளாவைச் சேர்ந்த ரவுடி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கூடுவாஞ்சேரியில் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரித்திஷ் குட்டாவை 4 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக் கொன்றது.
கேரளாவில் கொலை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரித்திஷ் ஓர் ஆண்டுக்கு முன்னர் கேரளாவில் இருந்து சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருடைய எதிரிகளில் யாரேனும்தான் இக்கொலைவெறிச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Comments
English summary
Kerala rowdy killed by unknowns today in Chennai. police filed case and investigating about this murder.
Story first published: Saturday, September 19, 2015, 16:22 [IST]