சபாஷ்.. நாராயணசாமியைப் பாராட்டிய மோடி.. ஆமா, கிரண் பேடி ஏன் இன்னும் பாராட்டலை??
Recommended Video

சென்னை: வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கால்வாயில் இறங்கி, கழிவுநீரை சுத்தப்படுத்திய முதல்வர் நாராயணசாமியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளது வரவேற்கக் கூடிய விஷயம். ஆனால் அந்த மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடிதானே முதல் பாராட்டை தெரிவித்திருக்க வேண்டும்?
நெல்லித்தோப்பு நாராயணசாமியின் சொந்த தொகுதியாகும். அப்பகுதியில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார் நாராயணசாமி. அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதல்வர் கவனித்தார்.
இதையடுத்து வாய்க்காலில் தானே இறங்கி குப்பைகளை அகற்றினார். தன்னுடைய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கால்வாயில் இறங்கி அடைப்புகளை நீக்கினார். ஒரு முதல்வர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ததை அனைவரும் பாராட்டினர்.

பாராட்டு
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நாராயணசாமியை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில் நாராயணசாமி அனைவருக்கும் முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தை வலிமைப்படுத்துவதாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

கிரண் பேடிக்கு இல்லை
நாராயணசாமி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும் அவரை மோடி பாராட்டியது வரவேற்கத்தக்க விஷயமாகும். ஆனால் மோடிக்கு இருக்கும் பரந்த மனம் கிரண் பேடிக்கு இல்லையே என்று புதுச்சேரிக்காரர்கள் புலம்புகின்றனர்.

சகிப்புத்தன்மை
நமது வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வதையே கேவலமாக கருதி ஆட்களை வைத்து சுத்தம் செய்வோர் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்துள்ளார் என்றால் அவரது சகிப்புத்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமரே பாராட்டினார்
புதுச்சேரி நிர்வாகத்தில் எப்போது பார்த்தாலும் தலையிடுபவர் ஆளுநர் கிரண் பேடி. ஆனால் நாராயணசாமியை அவர் முதல் ஆளாக பாராட்டவில்லை. மாறாக கண்டுக்காமல் விட்டு விட்டார். இவரும் மோடியின் கொள்கையை பின்பற்றுபவர்தானே. அவ்வப்போது நாராயணசாமி அரசை குறை கூறும் கிரண் பேடி தற்போது பிரதமரே பாராட்டியுள்ள சம்பவத்தை கண்டும் காணாமலும் இருப்பது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்..

ஈகோ
அரசு விழாக்களிலும் ரக்ஷாபந்தன் உள்ளிட்ட கலாசார விழாக்களிலும் மட்டும் போலியாக நாராயணசாமியுடன் கைகுலுக்கினால் போதுமா. ஒருவர் மீது எத்தகைய விமர்சனம் வைக்கிறோமே அந்த அளவுக்கு அவரது நல்ல செயல்களை பாராட்ட வேண்டும். இதெல்லாம் ஈகோ என்பதில்லாமல் வேறு என்ன சொல்வது? என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications