பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறது கொ.ம.தே.க!
பொள்ளாச்சி: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி தொகுதியில் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் நிற்கப் போகிறதாம்.
வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனே போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் கட்சியில் உள்ள ஒரே தெ்ரிந்த முகம் அவர் மட்டும்தான் என்பதால் அவரையே நிற்கும்படி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனராம்.

பொள்ளாச்சியில் கொமதேக
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளைக் கேட்டனர். ஆனால் கிடைத்ததோ பொள்ளாச்சி மட்டுமே. வேறு வழியில்லாமல் அதை ஏற்றுள்ளது அக்கட்சி.

இன்று மாலை வேட்பாளர் அறிமுகம்
இன்று மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வேட்பாளரை அறிமுகப்படுத்தவுள்ளனர். ஈஸ்வரனே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆர்வம் இல்லையே
இதுகுறித்து ஈஸ்வரன் கூறுகையில், இந்த தேர்தலில் எனக்கு போட்டியிட விருப்பம் இல்லை. ஆனால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் நான் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். அதனால் மாலையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில்தான் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வோம்.

தாமரையில் நிற்கிறோம்
பாஜகவின் தாமரை சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.

கொங்கு செழிக்க மோடி பிரதமராக வேண்டும்
கொங்கு செழிக்க மோடி பிரதமராக வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதியிலும் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார் ஈஸ்வரன்.












Click it and Unblock the Notifications