கொடநாடு எஸ்டேட் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.. பெரும் பரபரப்பு !
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்குள்ள பங்களாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது.

இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் அந்த எஸ்டேட்டில் கடந்த 6 ஆண்டுகளாக கம்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர் தனது வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு 29 வயது ஆகியுள்ளது. கடந்த சில தினங்களாக கண்பார்வை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தினேஷ்குமார் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கோத்தகிரி சோலுர் மட்டம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த தினேஷ் குமாரின் உடல் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகாக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த கொலை எதற்காக நடந்தது என்பதற்கான தெளிவான காரணம் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications