கொடநாடு காவலாளி கொலை விசாரணை சரியாகதான் போகுது.. எதுக்கு சிபிசிஐடி விசாரணை.. டிஜிபி கேள்வி
கொடநாடு காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியானப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 24ம் தேதி அதிகாலை புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. இதில் மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் படுகாயம் அடைந்தார்.
இந்த வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்த பின்னர், கொள்ளை கும்பல் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடி அலங்கார பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

மர்மம்
அதே போன்று கேரளத்தைச் சேர்ந்த சயான் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். இந்த அடுத்தடுத்த சாலை விபத்து சம்பவங்கள் இந்தக் கொலையில் உள்ள மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விசாரணை
காவலாளி கொலை வழக்கையும், இந்த விபத்து வழக்குகளையும் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனது என்ன என்பது பற்றியும் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை
மேலும், ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சி.பி.ஐ விசாரணை தேவை என்று கூறி வருகிறார்.

மறுப்பு
இந்த நிலையில், இன்று சென்னையில் கால்பந்துப் போட்டி தொடக்க விழாவிற்கு சென்ற டிஜிபி ராஜேந்திரன் செய்தியாளர்களிடம், கொடநாடு காவலாளி கொலை வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், அதனை சிபிசிஐடிக்கு மாற்றும் திட்டமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications