கொடநாடு காவலாளி கொலை விசாரணை சரியாகதான் போகுது.. எதுக்கு சிபிசிஐடி விசாரணை.. டிஜிபி கேள்வி
கொடநாடு காவலாளி கொலை வழக்கு விசாரணை சரியானப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 24ம் தேதி அதிகாலை புகுந்த கும்பல் ஒன்று காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. இதில் மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் படுகாயம் அடைந்தார்.
இந்த வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்த பின்னர், கொள்ளை கும்பல் ஜெயலலிதாவின் 5 கைக்கடிகாரங்கள் மற்றும் கண்ணாடி அலங்கார பொருட்களை மட்டும் கொள்ளையடித்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

மர்மம்
அதே போன்று கேரளத்தைச் சேர்ந்த சயான் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளார். இந்த அடுத்தடுத்த சாலை விபத்து சம்பவங்கள் இந்தக் கொலையில் உள்ள மர்மத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விசாரணை
காவலாளி கொலை வழக்கையும், இந்த விபத்து வழக்குகளையும் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என்றும், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போனது என்ன என்பது பற்றியும் வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை
மேலும், ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும் என தி.மு.க. செயல்தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சி.பி.ஐ விசாரணை தேவை என்று கூறி வருகிறார்.

மறுப்பு
இந்த நிலையில், இன்று சென்னையில் கால்பந்துப் போட்டி தொடக்க விழாவிற்கு சென்ற டிஜிபி ராஜேந்திரன் செய்தியாளர்களிடம், கொடநாடு காவலாளி கொலை வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், அதனை சிபிசிஐடிக்கு மாற்றும் திட்டமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications