கூடங்குளத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி!
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆய்வு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் அணு உலையில் கடந்த 22 ஆம் தேதி மின்சார உற்பத்தி தொடங்கியது.

முதற்கட்டமாக 70 முதல் 160 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்புக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, சில ஆய்வுகளுக்கு, ஆயத்தப் பணிகளுக்காகவும் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும், ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில், முதற்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்ததால், கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி கழக ஒழுங்காற்று வாரியம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து, நேற்று இரவு 9.43 மணிக்கு கூடங்குளம் முதல் உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.
தற்போது 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, இனி படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். இனி தொடர்ச்சியாக மத்திய மின் தொகுப்புக்கு மின்சாரம் அனுப்பப்படும் என்று கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications