கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக உயர்வு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் மின் உற்பத்தி ஆயிரம் மெகா வாட்டை எட்டியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணு உலையில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி மின் உற்பத்தி துவங்கப்பட்டது. பின்னர், படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

Koodankulam nuclear unit production of power increased to 1000 MW

2014ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி ஆய்வு பணிக்காக முதல் அணு உலை நிறுத்தப்பட்டது. அப்போது வரை 9267 மணி நேரங்கள் அணு உலை இயங்கியிருந்தது. முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி 17ம் தேதி உயர் வெப்ப அழுத்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் கூடங்குளத்தில் மீண்டும் முதல் அணு உலையில் மின்சாரம் தயாரிக்க அணுசக்தி ஓழுங்கு முறை வாரியம் அனுமதி அளித்தது.

பிப்ரவரி 1ம் தேதி காலை நிலவரப்படி 350 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்ட்டது. இந்த உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இரவு 9 மணிக்கு முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டை எட்டியது என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது அடுத்தடுத்த மாதங்களில் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+