கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும்போட்டி... சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 'காளையர்'
கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில், முதல் முறையாக நடைபெற்ற எருது விடும் போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில், பொங்கல் விழா மற்றும் யுகாதி பண்டிகையையொட்டி முதல் முறையாக மாபெரும் எருது விடும் போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது.
எருது விடும் போட்டியில் கிருஷ்ணகிரி, ஒரப்பம், கந்திகுப்பம், பர்கூர், ஊத்தங்கரை, கல்லாவி, வேப்பனஹள்ளி, மலையாண்டஹள்ளி, மத்தூர், வரட்டணப்பள்ளி மட்டுமின்றி திருவண்ணாமலை, வேலுர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதிகளில் இருந்தும் 337 காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து காளைகளும், மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் வாடிவாசல் கொண்டு வரப்பட்டது.
இந்த எருது விடும் போட்டியை போஸ்ட் மாஸ்டர் திருப்பதி துவக்கி வைத்தார். அதன் பின்னர் போட்டிகளின் விதிமுறைகளின்படி, ஒவ்வெரு காளையாக வாடிவாசல் வழியாக சிறந்துவிடப்பட்து.
சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை பொது மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார் . குறிப்பிட்ட இலக்கினை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு, விழா குழுவின் சார்பில் தங்ககாசுகள், சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த எருது விடும் விழாவில், காளைகள் முட்டியதில் ஒரு சிலருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். இந்த எருது விடும் போட்டியை காண கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.