தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்த கிருஷ்ணகிரி இளைஞர் கைது!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் ஒன்றை வைத்திருந்த கிருஷ்ணகிரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி நாட்டான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்துக்கு பணிசெய்யும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் மதியழகன் வேலை பார்த்த இடத்தில் பழுதான நிலையில் சாட்டிலைட் போன் ஒன்று அவர் கையில் சிக்கியுள்ளது. அது சாட்டிலைட் போன் என்பது தெரியாமலேயே பையில் வைத்திருந்துள்ளார் மதியழகன்.

இந்நிலையில் தனது திருமணத்திற்காக இந்தியா வந்த மதியழகன் அப்போனையும் கையில் கொண்டு வந்துள்ளார். விமான நிலைய சோதனையில் அதிகாரிகள் கண்ணில் அந்த போன் பட்டுவிட்டது.

ஆனால், அதிகாரிகளுக்கும் அது சாட்டிலைட் போன் என்பது தெரியவில்லை. எனவே, அதை சாதாரணமான ஒரு போன்தான் என்று வீட்டில் வைத்திருந்தார். அந்த போனும் அணைக்கப்பட்ட நிலையில்தான் இருந்துள்ளது.

இந்நிலையில் சென்னை க்யூ பிரிவு போலீசாருக்கு அந்த சாட்டிலைட் போனின் சிக்னல் கிடைத்துள்ளது. அது கிருஷ்ணகிரியில் இருந்து வருவது ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்டறியப்பட்டு கிருஷ்ணகிரி காவல்துறையினருக்கு செய்தி அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி போலீசார் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை கவனித்து விசாரணை மேற்கொண்டதில் மதியழகனிடம் அந்த போன் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அந்த போனை மதியழகன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து காவேரிப்பட்டணம் காவல்துறையினர் மதியழகனை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+