கூடங்குளம் அணு உலையின் வெப்ப நீர் செல்லும் குழாயில் திடீர் பழுது- மின்உற்பத்தி மீண்டும் நிறுத்தம்!!
நெல்லை: கூடங்குளம் முதலாவது அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாயில் திடீர் பழுது ஏற்பட்டதால் நேற்று இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் கடந்த 2013- ம் ஆண்டு மின் உற்பத்தி துவங்கியது.
படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஜூன் மாதம் ஆய்வு பணிக்காக முதல் அணு உலை நிறுத்தப்பட்டது.

அப்போது மீண்டும் 2 மாதங்களில் மின் உற்பத்தியை துவங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி தள்ளி போனது.
இதனிடையே அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தியை துவங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த 20-ந் தேதி அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து அணு உலையில் அணு பிளவு சோதனை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு மின் உற்பத்தி துவங்கப்பட்டது. ஆனால் அன்று மாலையே திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அன்று இரவு 11 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இந்த மின் உற்பத்தி நேற்று மாலை 750 மெகா வாட்டை எட்டியது. தொடர்ந்து மின் உற்பத்தியை அணு மின் நிலைய வி்ஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென நேற்று இரவு அணு உலையில் வெப்ப நீர் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர் விளக்கம்
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர், சிறிய அளவில் வெப்பநீர் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டது. ஓரிரு நாட்களில் இது சரி செய்யப்பட்டு வரும் என்றார்.
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி நாளை மறுநாள் (பிப்ரவரி 7-ந் தேதி) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications