ஜூலைக்குள் கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி- இயக்குனர்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் வரும் ஜூலை மாதத்திற்குள் மின் உற்பத்தி துவங்க முயற்சிகள் நடந்து வருவதாக அணு மி்ன் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடங்குளம் அணு மின் நிலைய வாளக இயக்குனர் சுந்தர் , "கூடங்குளம் அணு மின் நிலைய முதலாவது யூனிட்டில் இருந்து தினமும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு நாளைக்கு 2.4 கோடி யூனிட் அதாவது 24 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை 4 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். இங்கு யுரேனியம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு தினமும் 562 மெகா வாட் வழங்கப்படுகிறது. 2வது யூனிட்டில் வரும் ஜூலைக்குள் மின் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் இதுவரை 3 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் பொதுமக்களுக்கு அணு மின் நிலையம் குறித்த தவறான தகவல்களும், சந்தேகமும், பயமும் நீஙகியுள்ளது. இதனால் அணு மின் நிலையத்தை அடிக்கடி நிறைய பேர் பார்வையிடுகின்றனர்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications